Wednesday, 5 June 2013

ஆட்கொண்டருளுக

பாதி இரவி லெழுந்தருளிப்
  பாவி யேனை யெழுப்பியருட்
ஜோதி யளித்தென் னுள்ளகத்தே
  சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
  நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ்
  வுலகம் பெறுதல் வேண்டுவனே

இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
  இச்சை யேபெரு விச்சைஎன் றலைந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
  வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புத்திசெய் தறியேன்
  பொதுவி லேநடம் புரிகின்றாய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
  அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே

No comments:

Post a Comment